மேலும், அந்த நிலம் நாரணாபுரம் அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
திருப்பூர்: பல்லடம் அருகே ரூ.40 கோடி மதிப்பிலான கோயில் நிலம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் அங்காளம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான 8.95 ஏக்கர் புஞ்சை நிலம் பல்லடம் திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது.
சுமார் 40 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை பல்லடம் கரையான்புதூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், சேதுராமலிங்கம், செந்தில் அமுதா உள்ளிட்ட 6 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து 30 வருட காலமாக கோவிலுக்கு குத்தகை தொகை செலுத்தாமல் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த இந்து அறநிலையதுறை இணை ஆணையர் ஜெயசந்திரன் இந்து அறநிலையத்துறை சார்பில் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேற்படி நபர்களை ஆக்கிரமிப்பு தார்களாகக் கருதி நிலத்தை கையகப்படுத்தி நபர்களை வெளியேற்றம் செய்திட திருப்பூர் இணை ஆணையருக்கு உத்தரவு வழங்கியது.

இதனையடுத்து, இன்று பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ், திருப்பூர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் செல்வராஜ், நாராணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மோகன்தாஸ் மற்றும் காவல்துறையினரால் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, இந்த நிலம் நாரணாபுரம் அங்காளம்மன் கோயிலுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் அங்காளம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான 8.95 ஏக்கர் புஞ்சை நிலம் பல்லடம் திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது.
சுமார் 40 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை பல்லடம் கரையான்புதூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், சேதுராமலிங்கம், செந்தில் அமுதா உள்ளிட்ட 6 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து 30 வருட காலமாக கோவிலுக்கு குத்தகை தொகை செலுத்தாமல் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த இந்து அறநிலையதுறை இணை ஆணையர் ஜெயசந்திரன் இந்து அறநிலையத்துறை சார்பில் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேற்படி நபர்களை ஆக்கிரமிப்பு தார்களாகக் கருதி நிலத்தை கையகப்படுத்தி நபர்களை வெளியேற்றம் செய்திட திருப்பூர் இணை ஆணையருக்கு உத்தரவு வழங்கியது.
இதனையடுத்து, இன்று பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ், திருப்பூர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் செல்வராஜ், நாராணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மோகன்தாஸ் மற்றும் காவல்துறையினரால் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, இந்த நிலம் நாரணாபுரம் அங்காளம்மன் கோயிலுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.