ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொள்ளாச்சி அருகே தமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு. அத்தியாவசிய பொருட்கள் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
கோவை: தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அதிகளவில் பரவி வரும் நிலையில்தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரளா மற்றும் தமிழகம் எல்லை பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோபாலபுரம், மீனாட்சிபுரம் மற்றும் நடுப்புணி என ஏழு சோதனை சாவடி உள்ளது. இந்த ஏழு எல்லை சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் உள்ள வாகனங்கள் மட்டுமே எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.மேலும் மருத்துவம் மற்றும் முன் களப்பணியாளர்கள் உரிய அடையாள அட்டை காண்பிக்கப்பட்டால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் மற்ற வாகனங்களை எல்லைகள் தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
அதேபோல் கேரள மாநிலத்திலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தித் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.தற்போது ஊரடங்கு என்பது முழுமையாககடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரளா மற்றும் தமிழகம் எல்லை பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோபாலபுரம், மீனாட்சிபுரம் மற்றும் நடுப்புணி என ஏழு சோதனை சாவடி உள்ளது. இந்த ஏழு எல்லை சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் உள்ள வாகனங்கள் மட்டுமே எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.மேலும் மருத்துவம் மற்றும் முன் களப்பணியாளர்கள் உரிய அடையாள அட்டை காண்பிக்கப்பட்டால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் மற்ற வாகனங்களை எல்லைகள் தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
அதேபோல் கேரள மாநிலத்திலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தித் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.தற்போது ஊரடங்கு என்பது முழுமையாககடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.