தமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொள்ளாச்சி அருகே தமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு. அத்தியாவசிய பொருட்கள் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.


கோவை: தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அதிகளவில் பரவி வரும் நிலையில்தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளா மற்றும் தமிழகம் எல்லை பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோபாலபுரம், மீனாட்சிபுரம் மற்றும் நடுப்புணி என ஏழு சோதனை சாவடி உள்ளது. இந்த ஏழு எல்லை சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.



அத்தியாவசிய பொருட்கள் உள்ள வாகனங்கள் மட்டுமே எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.மேலும் மருத்துவம் மற்றும் முன் களப்பணியாளர்கள் உரிய அடையாள அட்டை காண்பிக்கப்பட்டால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் மற்ற வாகனங்களை எல்லைகள் தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

அதேபோல் கேரள மாநிலத்திலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தித் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.தற்போது ஊரடங்கு என்பது முழுமையாககடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...