பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு, திடீரென பேருந்து நிலையம் மற்றும் வடபுதூர் பகுதியிலுள்ள திரையரங்கங்களுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
கோவை: பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு, திடீரென பேருந்து நிலையம் மற்றும் வடபுதூர் பகுதியிலுள்ள திரையரங்கங்களுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் இன்று மாலை கிணத்துக்கடவு வந்தார். பின்னர் அவர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு திடீரென கிணத்துக்கடவு பேருந்து நிலையம் மற்றும் வடபுதூர் பகுதியிலுள்ள திரையரங்கங்களுக்குச் சென்றார்.

அங்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் திரையரங்க பகுதி சுத்தமாக உள்ளதா? கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா? திரையரங்கத்துக்குள் வைக்கப்பட்டுள்ள தீ தடுப்பான் கருவிகள் முறையாக செயல்படுகிறதா? அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அங்கு உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் தின்பண்டங்கள் தரமானதாக உள்ளதா? திரையரங்க உரிமம் புதுப்பிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின்போது சப்-கலெக்டருடன் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் ராமராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் வாசுதேவ், விமல்மாதவன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் உடன் வந்திருந்தனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள திரையரங்கங்களில் திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் இன்று மாலை கிணத்துக்கடவு வந்தார். பின்னர் அவர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு திடீரென கிணத்துக்கடவு பேருந்து நிலையம் மற்றும் வடபுதூர் பகுதியிலுள்ள திரையரங்கங்களுக்குச் சென்றார்.
அங்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் திரையரங்க பகுதி சுத்தமாக உள்ளதா? கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா? திரையரங்கத்துக்குள் வைக்கப்பட்டுள்ள தீ தடுப்பான் கருவிகள் முறையாக செயல்படுகிறதா? அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அங்கு உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் தின்பண்டங்கள் தரமானதாக உள்ளதா? திரையரங்க உரிமம் புதுப்பிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின்போது சப்-கலெக்டருடன் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் ராமராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் வாசுதேவ், விமல்மாதவன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் உடன் வந்திருந்தனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள திரையரங்கங்களில் திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.