கிணத்துக்கடவில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் திடீர் ஆய்வு

பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு, திடீரென பேருந்து நிலையம் மற்றும் வடபுதூர் பகுதியிலுள்ள திரையரங்கங்களுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார்.


கோவை: பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு, திடீரென பேருந்து நிலையம் மற்றும் வடபுதூர் பகுதியிலுள்ள திரையரங்கங்களுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் இன்று மாலை கிணத்துக்கடவு வந்தார். பின்னர் அவர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு திடீரென கிணத்துக்கடவு பேருந்து நிலையம் மற்றும் வடபுதூர் பகுதியிலுள்ள திரையரங்கங்களுக்குச் சென்றார்.



அங்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் திரையரங்க பகுதி சுத்தமாக உள்ளதா? கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா? திரையரங்கத்துக்குள் வைக்கப்பட்டுள்ள தீ தடுப்பான் கருவிகள் முறையாக செயல்படுகிறதா? அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அங்கு உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் தின்பண்டங்கள் தரமானதாக உள்ளதா? திரையரங்க உரிமம் புதுப்பிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது சப்-கலெக்டருடன் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் ராமராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் வாசுதேவ், விமல்மாதவன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் உடன் வந்திருந்தனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள திரையரங்கங்களில் திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...