கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிக்க 5 மருத்துவக்குழுக்கள்‌ நியமனம்..!

இந்த மருத்துவக் குழுவில்‌ 1 மருத்துவர்‌, 1 செவிலியர்‌ என 5 மண்டலத்திற்கு 5 மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில்‌ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில்‌ தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு (Home Triage) வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிக்க 5 மருத்துவக்குழுக்கள்‌ நியமிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில்‌ தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு

வீட்டிலேயே சென்று சிகிச்சை வழங்கும்‌ பணியினை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த மருத்துவக் குழுவில்‌ 1 மருத்துவர்‌, 1 செவிலியர்‌ கொண்ட ஒரு குழு வீதம்‌ 5 மண்டலத்திற்கு 5 மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள்‌. வீட்டில்‌ தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை (Home Triage) பிபி கிட்‌ அணிந்து மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியா்‌ கொண்ட குழு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி காய்ச்சல்‌ மற்றும்‌ ஆக்சிஜன்‌ அளவை கண்டறிந்து தொடர் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்‌.

மேலும்‌ மருந்து, மாத்திரைகள்‌ வழங்கப்படுகிறது. வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ கலையரங்கத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும்‌ கட்டுப்பாட்டு மையம்‌ மூலமாகவும்‌ இப்பணிகள்‌ கண்காணிக்கப்பட்டுவருகிறது என மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌, உதவி ST நல அலுவலர்‌ வசந்த்‌ திவாகர்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...