இந்த மருத்துவக் குழுவில் 1 மருத்துவர், 1 செவிலியர் என 5 மண்டலத்திற்கு 5 மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு (Home Triage) வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிக்க 5 மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு
வீட்டிலேயே சென்று சிகிச்சை வழங்கும் பணியினை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்௧கரா இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த மருத்துவக் குழுவில் 1 மருத்துவர், 1 செவிலியர் கொண்ட ஒரு குழு வீதம் 5 மண்டலத்திற்கு 5 மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை (Home Triage) பிபி கிட் அணிந்து மருத்துவர் மற்றும் செவிலியா் கொண்ட குழு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறிந்து தொடர் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
மேலும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலமாகவும் இப்பணிகள் கண்காணிக்கப்பட்டுவருகிறது என மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நல அலுவலர் சதீஷ்குமார், உதவி ST நல அலுவலர் வசந்த் திவாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு
வீட்டிலேயே சென்று சிகிச்சை வழங்கும் பணியினை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்௧கரா இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த மருத்துவக் குழுவில் 1 மருத்துவர், 1 செவிலியர் கொண்ட ஒரு குழு வீதம் 5 மண்டலத்திற்கு 5 மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை (Home Triage) பிபி கிட் அணிந்து மருத்துவர் மற்றும் செவிலியா் கொண்ட குழு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறிந்து தொடர் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
மேலும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலமாகவும் இப்பணிகள் கண்காணிக்கப்பட்டுவருகிறது என மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நல அலுவலர் சதீஷ்குமார், உதவி ST நல அலுவலர் வசந்த் திவாகர் ஆகியோர் உடனிருந்தனர்.