மேலும், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவில் சாலையைக் கடந்த போது கார் மோதி பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (55), இவரது மகன் பார்த்திபன் (31). பெயிண்டரான இவர் தனது நண்பர் பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாரதி ஜோசபுடன் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையம் பகுதியில் பெயிண்ட் அடிக்கும் பணிக்கு வந்துள்ளார்.
பின்னர், பணியை முடித்து விட்டு நேற்று மாலை வீட்டிற்குச் செல்ல சென்றாம்பாளையம் பிரிவு அருகே வந்து போது பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த கார் பார்த்திபன் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயம் ஏற்பட்ட பார்த்திபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலையே பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் பார்த்திபன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.