இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி டாப்ஸ்லிப் அருகே, மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி (டாப்சிலிப்) வனச்சரகத்தில் உள்ள ஒரு மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த, 11 வயது சிறுமி ஒருவரை சிலர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி அன்று டாப்சிலிப் அருகே உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த 11 வயது சிறுமியை சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து உள்ளதாகவும், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி (டாப்சிலிப்) வனச்சரகத்தில் உள்ள ஒரு மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த, 11 வயது சிறுமி ஒருவரை சிலர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி அன்று டாப்சிலிப் அருகே உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த 11 வயது சிறுமியை சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து உள்ளதாகவும், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.