மதுக்கரையில் மளிகை கடையில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்து கடை உரிமையாளரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் மளிகை கடையில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்து கடை உரிமையாளரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மதுக்கரை தண்டபாணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அரசன் (வயது 37). இவர் வீட்டின் முன்பு மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் செழியன் (47). அரசு பேருந்து ஓட்டுநர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செழியன் ரூ. 6 ஆயிரத்துக்கு அரசன் கடையிலிருந்து மளிகை பொருட்களை வாங்கினார்.
ஆனால் அதற்கான பணத்தை அவர் தரவில்லை. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அரசன் தனது கடையில் வேலை செய்யும் முருகன் என்பவரை அவரது வீட்டுக்கு அனுப்பி பணம் வாங்கி வருமாறு கூறினார்.
அப்போது அங்குச் சென்ற முருகனிடம் அவர் பணம் தர மறுத்து அவரை சத்தம் போட்டு அனுப்பி விட்டார். இந்த நிலையில் நேற்று அரசன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு செழியன் வீட்டிற்குச் சென்றார்.
அப்போது அங்கு குடிபோதையிலிருந்த செழியன் மீண்டும் பணம் தர மறுத்து தகராற்றில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் அரசனைத் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் பலத்த காயமடைந்த அரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். பின்னர் இது குறித்து அரசன் மதுக்கரை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் செழியனைக் கைது செய்தனர்.
கோவை மதுக்கரை தண்டபாணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அரசன் (வயது 37). இவர் வீட்டின் முன்பு மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் செழியன் (47). அரசு பேருந்து ஓட்டுநர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செழியன் ரூ. 6 ஆயிரத்துக்கு அரசன் கடையிலிருந்து மளிகை பொருட்களை வாங்கினார்.
ஆனால் அதற்கான பணத்தை அவர் தரவில்லை. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அரசன் தனது கடையில் வேலை செய்யும் முருகன் என்பவரை அவரது வீட்டுக்கு அனுப்பி பணம் வாங்கி வருமாறு கூறினார்.
அப்போது அங்குச் சென்ற முருகனிடம் அவர் பணம் தர மறுத்து அவரை சத்தம் போட்டு அனுப்பி விட்டார். இந்த நிலையில் நேற்று அரசன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு செழியன் வீட்டிற்குச் சென்றார்.
அப்போது அங்கு குடிபோதையிலிருந்த செழியன் மீண்டும் பணம் தர மறுத்து தகராற்றில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் அரசனைத் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் பலத்த காயமடைந்த அரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். பின்னர் இது குறித்து அரசன் மதுக்கரை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் செழியனைக் கைது செய்தனர்.