கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வார்டுகளில் பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்கப்படும்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 20- வார்டுகளில் உள்ள 30,000- வீடுகளுக்கு அடுத்த சில மாதங்களில் பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என கோவை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 20- வார்டுகளில் உள்ள 30,000- வீடுகளுக்கு அடுத்த சில மாதங்களில் பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என கோவை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோவை மாநகராட்சி நஞ்சுண்டா புரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டி முடிக்கப்பட உள்ளநிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 20-வார்டுகளுக்கு உட்பட்ட 30,000- வீடுகளுக்குப் பாதாளச் சாக்கடை இணைப்புக்கான நீண்டநாள் காத்திருப்பு இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரி கூறியதாவது:-

பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, மாநகராட்சியில் உள்ள 20-வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் விண்ணப்பங்களை வழங்கத் தொடங்க உள்ளோம்.

இந்த நடவடிக்கையால் 33,000-வீடுகள் பயனடைய உள்ளன. 20-வார்டுகளில் நல்லம்பாளையம், ரத்தினபுரி, கணபதி, ஆவாரம் பாளையம், காந்திபுரம், ரேஸ் கோர்ஸ், பி.என். பாளையம், புலியகுளம், சுங்கம், ஒலிம்பஸ், ராமநாதபுரம் மற்றும் சில பகுதிகள் உள்ளடங்கும்.

மாநகராட்சியானது நகரின் பாதாளச் சாக்கடை அமைப்பானது நஞ்சுண்டாபுரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 40-மில்லியன் லிட்டர் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குடிமைப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், கழிவுநீரைச் சுத்திகரிக்கும் கருவிகளை நிறுவுதல், துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான சாதனங்களைச் சரிசெய்தல் போன்ற பணிகளில் கோவை மாநகராட்சியின் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் கோவை மாநகராட்சிக்குத் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான சாதனங்களை அமைக்க உத்தரவு இடப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ₹33.79-கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 10-ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம், நீதிமன்றத் தடை உத்தரவைத் தொடர்ந்து வேலையை நிறுத்திய மாநகராட்சி இறுதியாக 2017-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திடம் இருந்து அனுமதி பெற்றது.

இந்த உத்தரவின் ஒரு பகுதியாக, வடக்கு மண்டலத்தில் உள்ள குடியிருப்புகளில் ஒன்றிலிருந்து இரண்டு தொட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றவும், சுவரின் உயரத்தை உயர்த்தவும், அதிக சக்தி கொண்ட டீசல் ஜெனரேட்டர், துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சாதனங்கள் மற்றும் மாசு தரவுகளை நிறுவவும் நீதிமன்றம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவைப் பின்பற்றி மீண்டும் பணியைத் தொடர, முதலில் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை மாநகராட்சி மீண்டும் பணியில் அமர்த்தியது. ஆனால், ஒப்பந்ததாரரை ரத்து செய்து, புதிதாக டெண்டர் விடப்பட்டு, வேறு ஒப்பந்ததாரருக்குப் பணி வழங்க வேண்டும் என, வட்டாரங்கள் தெரிவித்தன.

33.79- கோடிக்கு மாநகராட்சி முதல் டெண்டர் விடப்பட்டது. பணி இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், மாநகராட்சி ₹17.96-கோடி செலவழித்துள்ளது, அது இரண்டாவது டெண்டரை ₹43.60- கோடிக்கு எடுத்தது, மேலும் அந்த தொகையில் நீதிமன்றம் ஆணையிட்ட பணிகள் அடங்கும் என்று வட்டாரங்கள் விளக்கின.

மேலும், அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 20- வார்டுகளில் உள்ள 30,000- வீடுகளுக்கு அடுத்த சில மாதங்களில் பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என கோவை மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...