கோவையில் கொரோனா எதிா்ப்பாற்றல் குறித்துக் கண்டறிய 1,500 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு..!

கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளதால் பொதுமக்களில் எத்தனை சதவீதம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் உள்ளது என கண்டறியப்பட உள்ளது.


கோவை: கோவையில் கொரோனா எதிா்ப்பாற்றல் குறித்துக் கண்டறிய 1,500 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா 3வது அலை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்களில் எத்தனை சதவீதம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் (ஆன்டி பாடிஸ்) உள்ளது என்று கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் கோவையில் மதுக்கரை, துடியலூா், பொள்ளாச்சி, சூலூா் உள்பட 52 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வசிக்கும் தொழிலாளா்கள், விவசாயிகள், வயதானவா்கள், இளைஞா்கள் என 1,500 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரிகள் கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள நவீன எந்திரம் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

கோவை மட்டுமின்றி தென்காசி, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனைகளும் இங்குதான் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றனா்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...