சிபிஎம் கோவை மாவட்ட மாநாடு: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

மார்க்சிஸ்ட் கட்சியின் 23-வது கோவை மாவட்ட மாநாடு, மருதமலை பொதிகை மண்டபத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கோவை: மார்க்சிஸ்ட் கட்சியின் 23-வது கோவை மாவட்ட மாநாடு, மருதமலை பொதிகை மண்டபத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.



இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன், பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

தேவையற்ற மேல்முறையீடுகளை அரசு செய்வதை கைவிட வேண்டும். அத்திக்கிடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள பேரூராட்சிகளை இணைக்க வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும், மேம்பாலப்பணிகளை விரைவு படுத்த வேண்டும்.

அதுவரை மாற்று பாதைகளை உருவாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அத்தக்கூலிகளாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்திரப்படுத்த வேண்டும். மாதத்தின் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.



நகர்புறத்தில் சாலை வசதி உள்ளிட்டு நிறைவேற்றப்படும் அடிப்படை வசதிக்கான திட்டங்களை கிராமப்புறத்தையும் சமகாலத்தில் இனைப்பதற்கான பணிகளை செய்ய வேண்டும். ஈசா யோகா மையத்தின் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகராத்தின் குடிநீர் விநியோகத்திற்கான திட்டங்களை கோவை மாநகராட்சியே செய்ய வேண்டும்.

பன்னாட்டு சூயஸ் நிறுவனத்திடம் வழங்கியுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி 11 ஆம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தை பெருந்திரளாக முற்றுகையிடுவது, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிற வரையில் தீவிரமான போராட்டத்தை முன்னெடுப்பது என மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...