பொள்ளாச்சியில் நியாய விலைக் கடைகள் மூலம் பணி நாட்களில் சுழற்சி முறையில் காலை 9- மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 2- மணி முதல் மாலை 6- மணி வரையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சியில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுநீள கரும்பு, 50 கிராம் முந்திரி, 50 கிராம் உலர் திராட்சை, 50 கிராம் ஏலக்காய் மற்றும் 15 எண்ணிக்கையிலான மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வாயிலாகத் தமிழகத்தில் உள்ள 2,15,48,060 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ரூபாய் ஆயிரத்து 7,97 கோடி அனுமதித்து தமிழக அரசால் ஆணையிடப்பட்டது.
இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் நியாயவிலைக்கடைகளின் வாயிலாகப் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யத் திட்டமிடப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் இன்று தொடங்கி வைத்தனர். இதில் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் பணி நாட்களில் சுழற்சி முறையில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுநீள கரும்பு, 50 கிராம் முந்திரி, 50 கிராம் உலர் திராட்சை, 50 கிராம் ஏலக்காய் மற்றும் 15 எண்ணிக்கையிலான மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வாயிலாகத் தமிழகத்தில் உள்ள 2,15,48,060 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ரூபாய் ஆயிரத்து 7,97 கோடி அனுமதித்து தமிழக அரசால் ஆணையிடப்பட்டது.
இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் நியாயவிலைக்கடைகளின் வாயிலாகப் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யத் திட்டமிடப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் இன்று தொடங்கி வைத்தனர். இதில் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் பணி நாட்களில் சுழற்சி முறையில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.