கோவையில் கத்தியை காட்டி மிரட்டி பழங்குடியின பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல்: இருவர் கைது

பவானியாற்றில் கத்தியை காட்டி மிரட்டி பழங்குடியின பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்த கேரள இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பவானியாற்றில் கத்தியை காட்டி மிரட்டி பழங்குடியின பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்த கேரள இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் டேம் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பழங்குடியின பெண். இவர் அப்பகுதியில் உள்ள பவானியாற்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு டூவீலரில் வந்த இரு இளைஞர்கள் அப்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளனர். பின்னர், அவர்களை பிடித்த அப்பெண் கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் திரண்டு இரு இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்து பில்லூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல் துறையினரின் விசாரணையில் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 22), அனீஷ் (வயது 25) என்பதும், அப்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து பில்லூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கேரள இளைஞர்கள் இருவர் பழங்குடி பெண்ணிடம் கத்தியை காட்டி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...