கோவையில் கத்தியை காட்டி மிரட்டி பழங்குடியின பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல்: இருவர் கைது

பவானியாற்றில் கத்தியை காட்டி மிரட்டி பழங்குடியின பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்த கேரள இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பவானியாற்றில் கத்தியை காட்டி மிரட்டி பழங்குடியின பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்த கேரள இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் டேம் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பழங்குடியின பெண். இவர் அப்பகுதியில் உள்ள பவானியாற்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு டூவீலரில் வந்த இரு இளைஞர்கள் அப்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளனர். பின்னர், அவர்களை பிடித்த அப்பெண் கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் திரண்டு இரு இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்து பில்லூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல் துறையினரின் விசாரணையில் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 22), அனீஷ் (வயது 25) என்பதும், அப்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து பில்லூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கேரள இளைஞர்கள் இருவர் பழங்குடி பெண்ணிடம் கத்தியை காட்டி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...