தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டம் சார்பில், ஊழியர் விரோத போக்கைக் கண்டித்தும், தகாத வார்த்தைகளால் பேசும் பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பணியிட மாறுதல் செய்யும் வரை 3 நாள் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து, பணியிட மாறுதல் செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர். மேலும் பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியைக் கண்டித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டம் சார்பில், ஊழியர் விரோத போக்கைக் கண்டித்தும், தகாத வார்த்தைகளால் பேசும் பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பணியிட மாறுதல் செய்யும் வரை 3 நாள் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து, பணியிட மாறுதல் செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர். மேலும் பல்லடம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமியைக் கண்டித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.