கோத்தகிரி, குன்னூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக, பகல் நேரங்களில் வாகனங்கள் சாலையில் முகப்பு விளக்கு எரிந்தபடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக, பகல் நேரங்களில் வாகனங்கள் சாலையில் முகப்பு விளக்கு எரிந்தபடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மழை பெய்த நிலையில், நேற்று மிதமான குளிர் நிலவி காலநிலை 6 டிகிரியாக இருந்து. காலை முதல் நன்கு வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், தற்போது பனிமூட்டம் சூழ்ந்து கடும் குளிர் நிலவி வருகிறது.
மேலும் பனிமூட்டமானது தேயிலைத் தோட்டங்கள், சாலைகளில் சூழ்ந்துள்ளதால் பகல் நேரம் தற்போது இரவு நேரம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு, இருபுற திசை விளக்குகள் எரிய விட்டவாறு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் கடும் குளிர் காரணமாகச் சாலையில் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது. எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.