திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வால்ரஸ் நிறுவனத்தை பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் பார்வையிட்டார்.
திருப்பூர்: திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வால்ரஸ் நிறுவனத்தை பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் பார்வையிட்டார்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வால்ரஸ் நிறுவனத்தை நேரில் பார்வையிட்ட பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தென் மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் பலரும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தின் மூலம் தற்போது வருமானம் ஈட்டி வருவதாகவும், தொழில் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் இங்குள்ள தொழில்களைத் தென் மாவட்டங்களில் கொண்டு செல்ல ஏதுவாக திருப்பூரில் வால்ரஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டுள்ளதாகவும் பேட்டி அளித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்காதது குறித்து ஆட்சிக்கு வரும்போது ஒன்று சொல்கிறார்கள் வந்த பின்பு ஒன்று செய்கிறார்கள் நிர்வாக காரணங்களாகக் கூட இருக்கலாம் என தெரிவித்தார்.
அம்மா கிளினிக் மூடப்படுவது குறித்த கேள்விக்கு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது முன் இருந்த நல்ல திட்டங்களை முன்பைவிட நல்ல முறையில் பராமரிக்க வேண்டுமே தவிர அவற்றை முழுமையாக மூடி விடக்கூடாது எனவும், ஆட்சி பொறுப்பேற்ற ஆறுமாத காலமே ஆகியிருப்பதாகவும் முழுமையாகக் குறை கூறி விட முடியாது குறைந்தபட்சம் 10-மாதங்கள் தேவைப்படும் எனவும், நாளை கவர்னர் உரைக்குப் பின் நாடாளுமன்றத்தில் பாஜக கட்சியின் செயல்பாடு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வால்ரஸ் நிறுவனத்தை நேரில் பார்வையிட்ட பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தென் மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் பலரும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தின் மூலம் தற்போது வருமானம் ஈட்டி வருவதாகவும், தொழில் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் இங்குள்ள தொழில்களைத் தென் மாவட்டங்களில் கொண்டு செல்ல ஏதுவாக திருப்பூரில் வால்ரஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டுள்ளதாகவும் பேட்டி அளித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்காதது குறித்து ஆட்சிக்கு வரும்போது ஒன்று சொல்கிறார்கள் வந்த பின்பு ஒன்று செய்கிறார்கள் நிர்வாக காரணங்களாகக் கூட இருக்கலாம் என தெரிவித்தார்.
அம்மா கிளினிக் மூடப்படுவது குறித்த கேள்விக்கு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது முன் இருந்த நல்ல திட்டங்களை முன்பைவிட நல்ல முறையில் பராமரிக்க வேண்டுமே தவிர அவற்றை முழுமையாக மூடி விடக்கூடாது எனவும், ஆட்சி பொறுப்பேற்ற ஆறுமாத காலமே ஆகியிருப்பதாகவும் முழுமையாகக் குறை கூறி விட முடியாது குறைந்தபட்சம் 10-மாதங்கள் தேவைப்படும் எனவும், நாளை கவர்னர் உரைக்குப் பின் நாடாளுமன்றத்தில் பாஜக கட்சியின் செயல்பாடு இருக்கும் எனவும் தெரிவித்தார்.