கோவையில் தனியார் இடத்தில் புகுந்து தாக்குதல்: 4-பேருக்கு போலீஸ் வலை

மசகாலிபாளையம் ஆண்டாள் நகரில் உள்ள தனியார் இடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில், நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: மசகாலிபாளையம் ஆண்டாள் நகரில் உள்ள தனியார் இடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில், நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த மாரண்ணன் என்பவரின் மகன் ஹரி பிரசாத் (25). இவருக்கு சிங்காநல்லூர் அடுத்த மசகாலிபாளையம் ஆண்டாள் நகரில் இவருக்குச் சொந்தமான இடம் உள்ளது.

இந்த இடத்தை சிவமணி என்பவருக்கு விற்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து, அந்த இடத்தை சுத்தப்படுத்திப் பாதுகாப்பு வேலி போட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும், சிவஞானம் என்பவரை வாட்ச்மேனாக அங்கு வேலைக்கு அமர்த்தி இருந்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர் திடீரென வேலிகளைச் சேதப்படுத்தி வாட்ச்மேனை அடித்து உதைத்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராகளையும் அடித்து நொறுக்கினர். மேலும் வாட்ச்மேன் சிவஞானத்திடம் உரிமையாளரைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டுச் சென்றனர்.

இதுகுறித்து, அங்கு இருந்த வாட்ச்மேன் சிவஞானம் இடத்தின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வெங்கடேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜேம்ஸ், சம்சுதீன், வினோத், செரீப் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...