மசகாலிபாளையம் ஆண்டாள் நகரில் உள்ள தனியார் இடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில், நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை: மசகாலிபாளையம் ஆண்டாள் நகரில் உள்ள தனியார் இடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில், நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த மாரண்ணன் என்பவரின் மகன் ஹரி பிரசாத் (25). இவருக்கு சிங்காநல்லூர் அடுத்த மசகாலிபாளையம் ஆண்டாள் நகரில் இவருக்குச் சொந்தமான இடம் உள்ளது.
இந்த இடத்தை சிவமணி என்பவருக்கு விற்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து, அந்த இடத்தை சுத்தப்படுத்திப் பாதுகாப்பு வேலி போட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும், சிவஞானம் என்பவரை வாட்ச்மேனாக அங்கு வேலைக்கு அமர்த்தி இருந்தனர்.
இந்நிலையில், அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர் திடீரென வேலிகளைச் சேதப்படுத்தி வாட்ச்மேனை அடித்து உதைத்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராகளையும் அடித்து நொறுக்கினர். மேலும் வாட்ச்மேன் சிவஞானத்திடம் உரிமையாளரைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து, அங்கு இருந்த வாட்ச்மேன் சிவஞானம் இடத்தின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வெங்கடேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜேம்ஸ், சம்சுதீன், வினோத், செரீப் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த மாரண்ணன் என்பவரின் மகன் ஹரி பிரசாத் (25). இவருக்கு சிங்காநல்லூர் அடுத்த மசகாலிபாளையம் ஆண்டாள் நகரில் இவருக்குச் சொந்தமான இடம் உள்ளது.
இந்த இடத்தை சிவமணி என்பவருக்கு விற்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து, அந்த இடத்தை சுத்தப்படுத்திப் பாதுகாப்பு வேலி போட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும், சிவஞானம் என்பவரை வாட்ச்மேனாக அங்கு வேலைக்கு அமர்த்தி இருந்தனர்.
இந்நிலையில், அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர் திடீரென வேலிகளைச் சேதப்படுத்தி வாட்ச்மேனை அடித்து உதைத்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராகளையும் அடித்து நொறுக்கினர். மேலும் வாட்ச்மேன் சிவஞானத்திடம் உரிமையாளரைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து, அங்கு இருந்த வாட்ச்மேன் சிவஞானம் இடத்தின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வெங்கடேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜேம்ஸ், சம்சுதீன், வினோத், செரீப் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.