கிணத்துக்கடவில் சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுபாடியில் இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அரசுப் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுபாடியில் இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அரசுப் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (38) இவரது மகன் சரத் (14) கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில், இன்று காலை கார்த்திக்கின் மகன் சரத், அவரது உறவினர் குருசாமி(19) என்பவரோடு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு அரண்மனைபுதூர் பகுதியிலுள்ள உறவினரைப் பார்க்கச் சென்றுள்ளார்.



அப்போது, முள்ளுபாடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது திடீரென குருசாமி பிரேக் பிடித்ததில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த சரத் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சரத் மற்றும் காயமடைந்த குருசாமி மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு வழியிலேயே பள்ளி மாணவன் சரத் உயிரிழந்துள்ளார்.

மேலும், காயமடைந்த குருசாமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...