இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூர்-ஊத்துக்குளி சாலை வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (27) ஊத்துக்குளி சாலை வழியாக வேலை நிமித்தமாக திருப்பூர் வந்துள்ளார்.

அப்போது, மன்னரை பகுதியை கடக்கும்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டது, எதிரே ஒரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. அப்போது, இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். அந்த இடத்தில் சாலை பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அந்த சாலை முழுமையாக சேதம் அடைந்ததால் கார்த்திக்ராஜா வாகனத்தை நிறுத்த முடியாமல் வாகனம் சரிந்தது. அப்போது கார்த்திக்ராஜா இடதுபுறமாக விழுந்ததில் இடது புறமாகச் சென்று கொண்டிருந்த ஈச்சர் வேன் அவர் மேல் ஏறி இறங்கியது.
இந்த விபத்தில் கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திக் ராஜாவின் உடலை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
திருப்பூர்-ஊத்துக்குளி சாலை வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (27) ஊத்துக்குளி சாலை வழியாக வேலை நிமித்தமாக திருப்பூர் வந்துள்ளார்.
அப்போது, மன்னரை பகுதியை கடக்கும்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டது, எதிரே ஒரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. அப்போது, இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். அந்த இடத்தில் சாலை பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், அந்த சாலை முழுமையாக சேதம் அடைந்ததால் கார்த்திக்ராஜா வாகனத்தை நிறுத்த முடியாமல் வாகனம் சரிந்தது. அப்போது கார்த்திக்ராஜா இடதுபுறமாக விழுந்ததில் இடது புறமாகச் சென்று கொண்டிருந்த ஈச்சர் வேன் அவர் மேல் ஏறி இறங்கியது.
இந்த விபத்தில் கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திக் ராஜாவின் உடலை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.