முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் தடுக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற வருபவர்களை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற வருபவர்களை மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் அலைக்கழிப்பதாகவும், உரிய மரியாதை கொடுக்காமல் அவமதிப்பு செய்வதாகவும், மருத்துவச் சான்று வழங்க நரம்பியல் மருத்துவர் அடாவடி போக்காக நடந்து கொள்வதாகவும், ஆர்டிஓ தலைமையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை கோசங்களாக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.