புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலையம்பாளையம் காளியாபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (38). சக்திவேலுக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதால் நதியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனையடுத்து, கடந்த 30ம் தேதி சக்திவேல் அங்குள்ள குழியில் தவறி விழுந்ததில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு மருத்துவமனை கழிவறைக்கு சென்று துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதை பார்த்த சிலர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமலையம்பாளையம் காளியாபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (38). சக்திவேலுக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதால் நதியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனையடுத்து, கடந்த 30ம் தேதி சக்திவேல் அங்குள்ள குழியில் தவறி விழுந்ததில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு மருத்துவமனை கழிவறைக்கு சென்று துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதை பார்த்த சிலர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.