சாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் அரசு அதிகாரி எனக்கூறி 7.5 பவுன் தங்கச் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
கோவை: சாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் அரசு அதிகாரி எனக்கூறி 7.5 பவுன் செயின் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் நெட்டயம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் இவரது மனைவி காளியம்மாள் வயது 70. இவர் கணவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக அவரை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார்.
நேற்று காலை அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அப்போது கோவிலுக்கு முன்பு டிப் டாப் உடையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்த ஒருவர் தான் அரசு அதிகாரி என்றும் கோவிலுக்குள் நகைகள் அணிந்து செல்ல அனுமதி இல்லை எனக்கூறினார்.
இதனையடுத்து மூதாட்டி தன் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க நகைகளைக் கழட்டி அந்த வாலிபரிடம் கொடுத்தார். அந்த வாலிபர் ஒரு காகிதத்தில் நகைகளை வைத்துக் கொடுத்தார். இதனைப் பெற்றுக் கொண்ட மூதாட்டி உள்ளே சென்று தனது கைப்பையைப் பார்த்தபோது அதில் நகைகள் இல்லை.
வாலிபர் தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது இது குறித்து மூதாட்டி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அரசு அதிகாரி என கூறி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் 7.5 தங்கச் செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் நெட்டயம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் இவரது மனைவி காளியம்மாள் வயது 70. இவர் கணவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக அவரை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார்.
நேற்று காலை அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அப்போது கோவிலுக்கு முன்பு டிப் டாப் உடையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்த ஒருவர் தான் அரசு அதிகாரி என்றும் கோவிலுக்குள் நகைகள் அணிந்து செல்ல அனுமதி இல்லை எனக்கூறினார்.
இதனையடுத்து மூதாட்டி தன் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க நகைகளைக் கழட்டி அந்த வாலிபரிடம் கொடுத்தார். அந்த வாலிபர் ஒரு காகிதத்தில் நகைகளை வைத்துக் கொடுத்தார். இதனைப் பெற்றுக் கொண்ட மூதாட்டி உள்ளே சென்று தனது கைப்பையைப் பார்த்தபோது அதில் நகைகள் இல்லை.
வாலிபர் தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது இது குறித்து மூதாட்டி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அரசு அதிகாரி என கூறி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் 7.5 தங்கச் செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.