கோவையில் மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பி 7.5 பவுன் செயின் பறிப்பு

சாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் அரசு அதிகாரி எனக்கூறி 7.5 பவுன் தங்கச் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.


கோவை: சாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் அரசு அதிகாரி எனக்கூறி 7.5 பவுன் செயின் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் நெட்டயம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் இவரது மனைவி காளியம்மாள் வயது 70. இவர் கணவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்காக அவரை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார்.

நேற்று காலை அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அப்போது கோவிலுக்கு முன்பு டிப் டாப் உடையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்த ஒருவர் தான் அரசு அதிகாரி என்றும் கோவிலுக்குள் நகைகள் அணிந்து செல்ல அனுமதி இல்லை எனக்கூறினார்.

இதனையடுத்து மூதாட்டி தன் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க நகைகளைக் கழட்டி அந்த வாலிபரிடம் கொடுத்தார். அந்த வாலிபர் ஒரு காகிதத்தில் நகைகளை வைத்துக் கொடுத்தார். இதனைப் பெற்றுக் கொண்ட மூதாட்டி உள்ளே சென்று தனது கைப்பையைப் பார்த்தபோது அதில் நகைகள் இல்லை.

வாலிபர் தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது இது குறித்து மூதாட்டி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அரசு அதிகாரி என கூறி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் 7.5 தங்கச் செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...