தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.
கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு ரூ. 17 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 4,215 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இதில் 781 சிவில் வழக்குகள் மாவட்ட தீர்ப்பு அலுவலர் மூலமாக 701 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு, ரூபாய் 77 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
582 கிரிமினல் வழக்குகளில் 157 விழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையுடன் ரூ.33 இலட்சத்து 29 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 349 சில்லறை வணிகர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, ரூபாய் 17 லட்சத்து 90 ஆயிரம் பெறப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
உணவு தரம் இல்லாத பிளாஸ்டிக் பயன்படுத்திய 116 உணவு வியாபாரிகள் மீது ரூபாய் 2 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவு புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 4,215 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இதில் 781 சிவில் வழக்குகள் மாவட்ட தீர்ப்பு அலுவலர் மூலமாக 701 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு, ரூபாய் 77 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
582 கிரிமினல் வழக்குகளில் 157 விழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையுடன் ரூ.33 இலட்சத்து 29 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 349 சில்லறை வணிகர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, ரூபாய் 17 லட்சத்து 90 ஆயிரம் பெறப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
உணவு தரம் இல்லாத பிளாஸ்டிக் பயன்படுத்திய 116 உணவு வியாபாரிகள் மீது ரூபாய் 2 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவு புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.