பொள்ளாச்சியில் வியாபாரிகள் சாலையோர கடைகளை தொடர்ந்து நடத்திட பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

தனிநபர் ஒருவர் வழக்கு தொடுத்ததின் பேரில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் நடைபாதை வியாபாரிகளை கடைகளை எடுக்கச் சொல்லி வற்புறுத்துவதாக மனு அளித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் வியாபாரிகள் சாலையோர கடைகளை தொடர்ந்து நடத்திட முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி புதிய, பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி, தேர்முட்டி, ராஜா மில் ரோடு, பெருமாள் செட்டி வீதி போன்ற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சாலையோர உணவு விடுதிகள், பழக்கடைகள் பொள்ளாச்சி நகராட்சி மூலமாக வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டும், வியாபாரிகளை ஊக்குவிக்கும் விதமாக நடைபாதை வியாபாரிகள் நல வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு வங்கியின் மூலமாக முதல் தவணையாக 10 ஆயிரம் கடன் முதல் 20 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வியாபாரிகள் மாதாமாதம் தவணை தொகையை வியாபாரிகள் முறையாக செலுத்தி விடுகின்றனர்.

இந்நிலையில், தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் பேரில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் நடைபாதை வியாபாரிகளை கடைகளை எடுக்கச் சொல்லி வற்புறுத்துவதாகவும் இத்தொழிலை நம்பி வியாபாரிகள் குடும்பத்தார் கல்வி, மருத்துவம் வாழ்வாதாரத்தை நம்பி உள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் நலன் காக்க சாலையோர கடைகளை தொடர்ந்து நடத்திட முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ ராவ் அவர்களிடம் மனு அளித்தனர்.



இதில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜோம்ஸ்ராஜா, நகர பொருளாளர் வடுகை கனகு, வீராசாமி, நீலகண்டன், ரகுபதி, PRK குருமார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...