தனிநபர் ஒருவர் வழக்கு தொடுத்ததின் பேரில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் நடைபாதை வியாபாரிகளை கடைகளை எடுக்கச் சொல்லி வற்புறுத்துவதாக மனு அளித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியில் வியாபாரிகள் சாலையோர கடைகளை தொடர்ந்து நடத்திட முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி புதிய, பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி, தேர்முட்டி, ராஜா மில் ரோடு, பெருமாள் செட்டி வீதி போன்ற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சாலையோர உணவு விடுதிகள், பழக்கடைகள் பொள்ளாச்சி நகராட்சி மூலமாக வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டும், வியாபாரிகளை ஊக்குவிக்கும் விதமாக நடைபாதை வியாபாரிகள் நல வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு வங்கியின் மூலமாக முதல் தவணையாக 10 ஆயிரம் கடன் முதல் 20 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வியாபாரிகள் மாதாமாதம் தவணை தொகையை வியாபாரிகள் முறையாக செலுத்தி விடுகின்றனர்.
இந்நிலையில், தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் பேரில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் நடைபாதை வியாபாரிகளை கடைகளை எடுக்கச் சொல்லி வற்புறுத்துவதாகவும் இத்தொழிலை நம்பி வியாபாரிகள் குடும்பத்தார் கல்வி, மருத்துவம் வாழ்வாதாரத்தை நம்பி உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் நலன் காக்க சாலையோர கடைகளை தொடர்ந்து நடத்திட முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ ராவ் அவர்களிடம் மனு அளித்தனர்.

இதில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜோம்ஸ்ராஜா, நகர பொருளாளர் வடுகை கனகு, வீராசாமி, நீலகண்டன், ரகுபதி, PRK குருமார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி புதிய, பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி, தேர்முட்டி, ராஜா மில் ரோடு, பெருமாள் செட்டி வீதி போன்ற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சாலையோர உணவு விடுதிகள், பழக்கடைகள் பொள்ளாச்சி நகராட்சி மூலமாக வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டும், வியாபாரிகளை ஊக்குவிக்கும் விதமாக நடைபாதை வியாபாரிகள் நல வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு வங்கியின் மூலமாக முதல் தவணையாக 10 ஆயிரம் கடன் முதல் 20 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வியாபாரிகள் மாதாமாதம் தவணை தொகையை வியாபாரிகள் முறையாக செலுத்தி விடுகின்றனர்.
இந்நிலையில், தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் பேரில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் நடைபாதை வியாபாரிகளை கடைகளை எடுக்கச் சொல்லி வற்புறுத்துவதாகவும் இத்தொழிலை நம்பி வியாபாரிகள் குடும்பத்தார் கல்வி, மருத்துவம் வாழ்வாதாரத்தை நம்பி உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் நலன் காக்க சாலையோர கடைகளை தொடர்ந்து நடத்திட முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ ராவ் அவர்களிடம் மனு அளித்தனர்.
இதில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜோம்ஸ்ராஜா, நகர பொருளாளர் வடுகை கனகு, வீராசாமி, நீலகண்டன், ரகுபதி, PRK குருமார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.