பணம் கொள்ளை போவதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் லாக்கர் வசதி..!

மாநில அளவில் முதல் கட்டமாக 2,825 டாஸ்மாக் கடைகளில் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணம் திருடு போவதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6,350 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகிறது. மதுபான கடைகளில் மது விற்பனை செய்த பின்னர் இரவு நேரத்தில் பணம் கொண்டு போவதை கண்காணிக்கும் திருடர்கள், தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் செல்வது அவ்வப்போது நடக்கிறது.

கடந்த ஆண்டில் 145 டாஸ்மாக் கடைகளில் திருட்டு கொள்ளை நடந்தது. 23 டாஸ்மாக் கடைகளில் இருந்து பணம் பறிக்கப்பட்டதாக வழக்குப் பதிவானது.

வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி அரிவாளுடன் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பதால் ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கடைகளில் வசூலாகும் பணத்தை விரைவில் கொண்டு செல்லாமல் கடைகளில் லாக்கர் அமைத்து அதில் பணத்தை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநில அளவில் முதல் கட்டமாக 2,825 டாஸ்மாக் கடைகளில் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது.

300 கிலோ எடையில் இரும்பு தகரம் அமைத்து அதை தரையில் பதித்து வைத்துள்ளனர். இதர கடைகளிலும் இது போன்று அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...