மாநில அளவில் முதல் கட்டமாக 2,825 டாஸ்மாக் கடைகளில் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணம் திருடு போவதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6,350 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகிறது. மதுபான கடைகளில் மது விற்பனை செய்த பின்னர் இரவு நேரத்தில் பணம் கொண்டு போவதை கண்காணிக்கும் திருடர்கள், தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் செல்வது அவ்வப்போது நடக்கிறது.
கடந்த ஆண்டில் 145 டாஸ்மாக் கடைகளில் திருட்டு கொள்ளை நடந்தது. 23 டாஸ்மாக் கடைகளில் இருந்து பணம் பறிக்கப்பட்டதாக வழக்குப் பதிவானது.
வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி அரிவாளுடன் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பதால் ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, கடைகளில் வசூலாகும் பணத்தை விரைவில் கொண்டு செல்லாமல் கடைகளில் லாக்கர் அமைத்து அதில் பணத்தை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநில அளவில் முதல் கட்டமாக 2,825 டாஸ்மாக் கடைகளில் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது.
300 கிலோ எடையில் இரும்பு தகரம் அமைத்து அதை தரையில் பதித்து வைத்துள்ளனர். இதர கடைகளிலும் இது போன்று அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6,350 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகிறது. மதுபான கடைகளில் மது விற்பனை செய்த பின்னர் இரவு நேரத்தில் பணம் கொண்டு போவதை கண்காணிக்கும் திருடர்கள், தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் செல்வது அவ்வப்போது நடக்கிறது.
கடந்த ஆண்டில் 145 டாஸ்மாக் கடைகளில் திருட்டு கொள்ளை நடந்தது. 23 டாஸ்மாக் கடைகளில் இருந்து பணம் பறிக்கப்பட்டதாக வழக்குப் பதிவானது.
வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி அரிவாளுடன் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பதால் ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, கடைகளில் வசூலாகும் பணத்தை விரைவில் கொண்டு செல்லாமல் கடைகளில் லாக்கர் அமைத்து அதில் பணத்தை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநில அளவில் முதல் கட்டமாக 2,825 டாஸ்மாக் கடைகளில் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது.
300 கிலோ எடையில் இரும்பு தகரம் அமைத்து அதை தரையில் பதித்து வைத்துள்ளனர். இதர கடைகளிலும் இது போன்று அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.