பணம் கொள்ளை போவதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் லாக்கர் வசதி..!

மாநில அளவில் முதல் கட்டமாக 2,825 டாஸ்மாக் கடைகளில் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணம் திருடு போவதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6,350 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகிறது. மதுபான கடைகளில் மது விற்பனை செய்த பின்னர் இரவு நேரத்தில் பணம் கொண்டு போவதை கண்காணிக்கும் திருடர்கள், தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் செல்வது அவ்வப்போது நடக்கிறது.

கடந்த ஆண்டில் 145 டாஸ்மாக் கடைகளில் திருட்டு கொள்ளை நடந்தது. 23 டாஸ்மாக் கடைகளில் இருந்து பணம் பறிக்கப்பட்டதாக வழக்குப் பதிவானது.

வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி அரிவாளுடன் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பதால் ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கடைகளில் வசூலாகும் பணத்தை விரைவில் கொண்டு செல்லாமல் கடைகளில் லாக்கர் அமைத்து அதில் பணத்தை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநில அளவில் முதல் கட்டமாக 2,825 டாஸ்மாக் கடைகளில் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது.

300 கிலோ எடையில் இரும்பு தகரம் அமைத்து அதை தரையில் பதித்து வைத்துள்ளனர். இதர கடைகளிலும் இது போன்று அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...