கோவையில் 20 வீடுகளில் திட்டமிட்டு திருடிய கில்லாடி திருடன் கைது..!

பணத்தை திருடி குடும்ப செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை வைத்து செலவு செய்து வந்துள்ளான்.


கோவை: கோவையில் 20 வீடுகளில் திட்டமிட்டு திருடிய கில்லாடி திருடனை போலீசார் கைது செய்தனர்.

கோவை மதுக்கரை குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ஒரு லட்சம் ரூபாய் 5 பவுன் தங்க நகை, லேப்டாப் திருடிச் சென்றார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கில்லாடி திருடன் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ் (32) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் இவர் மீது சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளன. இவர்களை அயனாவரத்தில் தங்க வைத்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பணத்தை திருடி குடும்பத்துக்கு செலவுக்கு கொடுத்துவிடுவார். மீதமுள்ள பணத்தை வைத்து, இவர் செலவு செய்து வந்துள்ளார். பல முறை இவர் சிறைக்கு சென்று வந்தவர்.

மேலும் பல திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொட‌ர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...