பணத்தை திருடி குடும்ப செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை வைத்து செலவு செய்து வந்துள்ளான்.
கோவை: கோவையில் 20 வீடுகளில் திட்டமிட்டு திருடிய கில்லாடி திருடனை போலீசார் கைது செய்தனர்.
கோவை மதுக்கரை குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ஒரு லட்சம் ரூபாய் 5 பவுன் தங்க நகை, லேப்டாப் திருடிச் சென்றார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கில்லாடி திருடன் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ் (32) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர் மீது சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளன. இவர்களை அயனாவரத்தில் தங்க வைத்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பணத்தை திருடி குடும்பத்துக்கு செலவுக்கு கொடுத்துவிடுவார். மீதமுள்ள பணத்தை வைத்து, இவர் செலவு செய்து வந்துள்ளார். பல முறை இவர் சிறைக்கு சென்று வந்தவர்.
மேலும் பல திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மதுக்கரை குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ஒரு லட்சம் ரூபாய் 5 பவுன் தங்க நகை, லேப்டாப் திருடிச் சென்றார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கில்லாடி திருடன் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ் (32) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர் மீது சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளன. இவர்களை அயனாவரத்தில் தங்க வைத்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பணத்தை திருடி குடும்பத்துக்கு செலவுக்கு கொடுத்துவிடுவார். மீதமுள்ள பணத்தை வைத்து, இவர் செலவு செய்து வந்துள்ளார். பல முறை இவர் சிறைக்கு சென்று வந்தவர்.
மேலும் பல திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.