தமிழகத்தில் ஆபரேஷன் ரவுடி வேட்டையில் 3,325 பேர் கைது - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்..!

மேலும், போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் 23 டன் கஞ்சா மற்றும் 20 கிலோ ஹெராயன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் 2021-ம் ஆண்டில் ஆபரேஷன் ரவுடி வேட்டை நடவடிக்கையால் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக காவல்துறை கடந்த 2021ம் ஆண்டில் பல்வேறு சாவல்களை சந்தித்துள்ளது. ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இமானுவேல் சேகரன் நினைவுநாள், மதுரை தேர் திருவிழா, திருவண்ணாமலை தீபம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அமைதியாக நடத்தப்பட்டன.

அதேபோல், தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட்டு, குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டது.

தென் தமிழகத்தில் நடைபெற்று வந்த சாதிய கொலைகள் மற்றும் வடதமிழகத்தில் நடைபெற்று வந்த ரவுடிகளுக்கிடையேயான பழிவாங்கும் கொலைகளைத் தடுக்க ‘ஆபரேஷன் ரவுடி வேட்டை' நடவடிக்கை எடுக்கப்பட்டு 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அவர்கள் வைத்திருந்த, 1,117 பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் 23 டன் கஞ்சா மற்றும் 20 கிலோ ஹெராயன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா 2ம் அலையினால், பணியில் இருந்த 139 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். வாரத்தில் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த 2021ம் ஆண்டில் வாரிசுகள் 1,500 பேர் காவல்துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் காவலர்கள் பணியாளர்கள் 1,067 பேருக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறப்பட்டுள்ளது.

மேலும், 989 எஸ்.ஐ மற்றும் 10 ஆயிரம் கான்ஸ்டபிள் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல்துறையால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறையை குறைத்தல், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடைபெற்று வரும் போதைப் பொருட்களின் பயன்பாடு, குற்றங்களுக்கு எதிரான சமரசமில்லாத நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் நடப்பு ஆண்டில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அமைதியான வாழ்வு மேற்கொள்வதை காவல்துறை உறுதி செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...