தலைமறைவாக இருந்த 23 வயது ஆட்டோ ஓட்டுனரை நேற்று நள்ளிரவு போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர் தன் உறவினர் வீட்டில் தங்கி ஆட்டோ ஓட்டும் பணி செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த 16 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதை தன் பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்கள் அறிவுரையின் பேரில் சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், விசாரணை செய்த போலீசார் தலைமறைவாக இருந்த 23 வயது ஆட்டோ ஓட்டுனரை நேற்று நள்ளிரவு கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர் தன் உறவினர் வீட்டில் தங்கி ஆட்டோ ஓட்டும் பணி செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த 16 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதை தன் பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்கள் அறிவுரையின் பேரில் சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், விசாரணை செய்த போலீசார் தலைமறைவாக இருந்த 23 வயது ஆட்டோ ஓட்டுனரை நேற்று நள்ளிரவு கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.