கான்கிரீட் குழாயில் உடைப்பு காரணமாக துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் குறிச்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், நாளை குடிநீர் விநியோகம் மீண்டும் துவங்கும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் தகவல்.
கோவை: குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் மீண்டும் துவங்கும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பில்லூர் அணையை நீராதாரமாக கொண்ட கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பல்லடம் நகராட்சி மற்றும் 18-பேரூராட்சிகள் மற்றும் 940-ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 1500-மி.மீ விட்டமுள்ள கான்கிரீட் குழாயில் 01.01.2022-அன்று அதிகாலையில் கூடலூர் பேரூராட்சியிலுள்ள செல்வபுரம் என்ற பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக கான்கிரீட் குழாயிற்குப் பதிலாக 1500-மி.மீ எம்.எஸ்.சூழாய் பதிக்கும் பணிகள் துவங்கப்பட்டு 03.01.2022-அதிகாலை சீரமைக்கும் பணிகள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகக் கோவை மாநகராட்சியின் துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் குறிச்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாளை 03.01.2022-பிற்பகலில் குடிநீர் விநியோகம் மீண்டும் துவங்கும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பில்லூர் அணையை நீராதாரமாக கொண்ட கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பல்லடம் நகராட்சி மற்றும் 18-பேரூராட்சிகள் மற்றும் 940-ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 1500-மி.மீ விட்டமுள்ள கான்கிரீட் குழாயில் 01.01.2022-அன்று அதிகாலையில் கூடலூர் பேரூராட்சியிலுள்ள செல்வபுரம் என்ற பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக கான்கிரீட் குழாயிற்குப் பதிலாக 1500-மி.மீ எம்.எஸ்.சூழாய் பதிக்கும் பணிகள் துவங்கப்பட்டு 03.01.2022-அதிகாலை சீரமைக்கும் பணிகள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகக் கோவை மாநகராட்சியின் துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் குறிச்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாளை 03.01.2022-பிற்பகலில் குடிநீர் விநியோகம் மீண்டும் துவங்கும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.