ரூ.21-லட்சம், 22-பவுன் நகைகளுடன் மாயமான போத்தனூர் சிறுவர்கள் பிடிபட்டனர்

வீட்டிலிருந்து எடுத்து வந்த பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்று விட்டதாகவும், தங்களிடம் பணம் இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இதைக் கேட்டு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.


கோவை: ரூ.21-லட்சம், 22-பவுன் நகைகளுடன் மாயமான போத்தனூர் சிறுவர்கள் பிடிபட்டனர்.

கோவை போத்தனூர் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14-வயது மாணவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான 8-ம் வகுப்பு படிக்கும் மாணவருடன் மாயமானார். இவர்களை அவர்களின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. எங்க சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் தந்தை வீட்டில் வைத்திருந்த ரூ.21 லட்சம் ரொக்கப்பணம், 22 பவுன் தங்க நகை ஆகியவற்றைக் காணவில்லை. பணம் நகையைச் சிறுவர்கள் எடுத்துச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான 2 சிறுவர்களும் திருச்சியில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த 2 சிறுவர்களையும் மடக்கிப் பிடித்து கோவை அழைத்து வந்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது, வீட்டிலிருந்து எடுத்து வந்த பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்று விட்டதாகவும், தங்களிடம் பணம் இல்லை என்றும் கூறியதாகத் தெரிகிறது.

இதைக் கேட்டு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கரும்புக்கடை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...