கோவையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இன்று முதல் முன்பதிவு தொடக்கம் - கோவை மாநகராட்சி.

கோவை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக அரசு பள்ளி மாணவர்கள் 22,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டம்.



கோவை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. வரும் 3 ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றுபிரதமர் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 33 லட்சத்து 20 ஆயிரம் உள்ளனர். இவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3-ந் தேதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளுக்கே சென்று சிறுவர்களுக்கு நேரடியாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கோவை மாநகராட்சி பகுதியில் 15 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஜனவரி 10-ம் தேதி முதல் கோவையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும்கோவையில் முதற்கட்டமாக 15 முதல் 18 வயது வரை உள்ள 22,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம். கோவை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக அரசு பள்ளி மாணவர்கள் 22, 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடியாக பள்ளிக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்த உள்ளோம். படிப்படியாக அடுத்த கட்டமாக கோவை மாநகராட்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பள்ளியிலேயே நேரடியாக தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதற்கான முன்பதிவுஇன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் சிறுவர்களை நேரடியாக ஆன்லைன் மூலம் கோவின் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொரோனா, ஒமைக்ரான் நோய்த்தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என தெரிவித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...