தூய்மை பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டி சமூக நீதி தூய்மை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும், வேலை தொடங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என சமூக நீதி தூய்மை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும், வேலை தொடங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என சமூக நீதி தூய்மை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் சமூகநீதி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் "ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சம்பளத்தை 100- ரூபாயிலிருந்து 475-ரூபாயாக உயர்த்தி தர வலியுறுத்தியும் வேலை தொடங்கும் நேரத்தை 5-மணியிலிருந்து 7-மணியாக மாற்றக் கோரியும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இச்சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.



மேலும் "தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் ஆக்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்" பதாகைகளையும் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...