புத்தாண்டை முன்னிட்டு கோவையில் 45-இடங்களில் வாகன சோதனை சாவடிகள், தகராறு செய்தால் கைது- கோவை மாநகர காவல் ஆணையர்

மாநகரில் 45-இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் ஆணையர் குடிபோதையில் வாகனம் இயக்குதல், தகராறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.



கோவை: மாநகரில் 45-இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் ஆணையர் குடிபோதையில் வாகனம் இயக்குதல், தகராறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், இன்று இரவு கோவை மாநகரத்தில் அனைத்து காவல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு 1050-போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



மாநகரில் 45-இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் ஆணையர் குடிபோதையில் வாகனம் இயக்குதல், தகராறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

11-சோதனை சாவடிகளில் 7-சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்கள் கண்காணிப்பு அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கப்பட உள்ளதாகவும் 44-இருசக்கர வாகனங்கள், 23-மொபைல் ரோந்து வாகனங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் கூறிய பிரதீப் குமார் சில மேம்பாலங்களில் நான்கு மணி நேரத்திற்குப் போக்குவரத்து தடை செய்யப்படும் எனவும், கோவில்கள், சர்சுகளில் வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதீப் குமார் வரும் காலங்களில் சமூக வலைத்தளங்களில் ஜாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாகப் பதிவு செய்தால், வழக்குப் பதிவு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் எனவும், கோவை மாநகரில் அமைதியைக் காப்பாற்றுவோம் எனவும், ஏற்கனவே கூறியது போன்று குழந்தைகள் பெண்கள் பாதுகாப்புக்கென முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முதலில் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

தற்போது போக்சோவில் கைது செய்யப்பட்ட மூவர் உள்பட 70-பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் படி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சட்டப்படி எந்த அளவுக்குச் செல்ல முடியுமோ அந்த அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும், அதேசமயம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

சமீபகாலமாகக் கோவை மாநகர இரவு நேரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறிய பிரதீப்குமார் பேஸ் ரெகனைசேசன் சாப்ட்வேர் மூலம் கண்காணிப்படுவதை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு 1872- சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பட்டு குற்றங்கள் கண்டறியபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளில் முக்கிய வழக்குகளைத் தேர்வு செய்து துணை ஆணையர் அதிகாரத்திலான காவல்துறையினர் கவனம் செலுத்தி வருவதாகவும், கடந்த ஆண்டுகளில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இந்த ஆண்டு வெளியில் வந்தவர்களைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஐம்பது கிராம் கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டாலும் அந்த நபரின் தொடர்ச்சியாக உள்ள நபர்களைக் கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான லிஸ்ட் எடுத்துள்ளதாகவும், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருட்கள், சாலை பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...