கோவையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி விவகாரம்: பள்ளி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளர் கார்த்திகா தலைமையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடைபெறும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் 8 வது நாளாக நடைபெற்று வருவதை கண்டித்து நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று அதே பள்ளியின் முன்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பள்ளியின் முன்புறம் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளர் கார்த்திகா தலைமையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடைபெறும் பள்ளியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 19 பேரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்தனர்.

முன்னதாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட கோவை மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் பயிற்சி நடைபெறும் பள்ளிக்கு வந்த நிலையில், பள்ளி வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்துத்துவ அமைப்பினரை பள்ளி வளாகத்திற்குள் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரனை இந்துத்துவ அமைப்பினர் தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழல் நிலவியது. இதனையடுத்து,

பள்ளியின் முன்பாக உள்ள பேக்கரி உட்பட கடைகள் அடைக்கப்பட்டது.

காவல் துறையினருக்கும், இந்து அமைப்பினர் இடையே தள்ளு முள்ளு மற்றும் நாம் தமிழர் முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...