தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து கோவையில் போலீசார் விசாரணை..!

கோவை அருகே உள்ள நல்லூர்வயல் மற்றும் குளத்துப்பாளையத்தில், ராஜேந்திரபாலாஜி குறித்து விருதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை நடத்தினர்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக, 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில், ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கியுள்ளனர்.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க, 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரபாலாஜியை பிடிக்க, தனிப்படை போலீசார், பெங்களூர், கேரளா, டில்லியில் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில், கோவை அருகே உள்ள நல்லூர்வயல் மற்றும் குளத்துப்பாளையத்தில், ராஜேந்திரபாலாஜி குறித்து விருதுநகர் மாவட்ட தனிப்படை இன்ஸ்பெக்டர் ராமராஜ், மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ.,பாலமுரளி, ஆமத்துார் எஸ்.ஐ., கார்த்திக் மற்றும் ஐந்து காவலர் என 8 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

இப்பகுதியில், ''ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடம், விசாரணை செய்து வருகிறோம்,'' என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...