கோவையில் கிராமங்களுக்குள் நுழையும் காட்டுயானைகள் மீது பட்டாசுகளை வீசி எறியக் கூடாது - வனத்துறையினர் எச்சரிக்கை..!

ஊருக்குள் காட்டு யானைகள் நுழைந்தால், உடனடியாக அப்பகுதியில் இருக்கும் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


கோவை: கோவை பெரிய நாய்க்கம்பாளையம் அருகே கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளின் மீது பட்டாசுகளை வீசி எறியக் கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது.

கோவை புறநகர் பகுதிகளில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் மலையோர கிராமங்களில், தினசரி இரவு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கிராமங்களில் ஒரு சில இடங்களில், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளின் மீது பட்டாசுகளை வீசி எறிகின்றனர். இதனால் காட்டு யானைகள் உடலில் தீக்காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஊருக்குள் காட்டு யானைகள் நுழைந்தால், உடனடியாக அப்பகுதியில் இருக்கும் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தகவல் தெரிவித்தல் வேண்டும்.

யானைகளை விரட்ட பட்டாசுகளை வீசக்கூடாது. அவை வரும் பாதையின் ஓரத்தில் வெடிக்கலாம். யானைகளின் மீது பட்டாசு கொளுத்திவீசும் நபர்கள் மீது, வனத்துறை சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை வனச்சரகத்தில் நேற்று முன்தினம் மூன்று இடங்களிலும், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் தலா, 2 இடங்களிலும் சிறுமுகை வனச்சரகத்தில் ஒரு இடத்திலும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன.

இப்பகுதிகளில், மலையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...