தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்த ஸ்ரீகுமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஏர் கமோடர் சஞ்சீவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை சூலுார் விமானப்படை தளத்தின் தலைமை அதிகாரியாக சஞ்சீவ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென்னிந்தியாவில் அமைந்துள்ள பிரதான விமானப்படை தளங்களில் ஒன்றான கோவை மாவட்டம், சூலுாரில் தேஜஸ் இலகு ரக போர் விமானங்கள், ஏஎன் 32 விமானங்கள், எம்ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர்கள் உள்ளன.
விமானப்படை விமானங்கள் மற்றும் படையினர் பயன்படுத்தும் கருவிகளை பழுது பார்க்கும் தளமும் செயல்பட்டு வருகிறது.
இந்த தளத்தின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்த ஸ்ரீகுமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏர் கமோடர் சஞ்சீவ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை அதிகாரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், ஏர் கமோடர் ஸ்ரீகுமார், தன் பொறுப்புகளை புது அதிகாரி சஞ்சீவிடம் ஒப்படைத்தார். ஏர் கமோடர் சஞ்சீவ், விமானப்படையின் போக்குவரத்து அணியை பராமரிப்பதில் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவில் அமைந்துள்ள பிரதான விமானப்படை தளங்களில் ஒன்றான கோவை மாவட்டம், சூலுாரில் தேஜஸ் இலகு ரக போர் விமானங்கள், ஏஎன் 32 விமானங்கள், எம்ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர்கள் உள்ளன.
விமானப்படை விமானங்கள் மற்றும் படையினர் பயன்படுத்தும் கருவிகளை பழுது பார்க்கும் தளமும் செயல்பட்டு வருகிறது.
இந்த தளத்தின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்த ஸ்ரீகுமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏர் கமோடர் சஞ்சீவ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை அதிகாரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், ஏர் கமோடர் ஸ்ரீகுமார், தன் பொறுப்புகளை புது அதிகாரி சஞ்சீவிடம் ஒப்படைத்தார். ஏர் கமோடர் சஞ்சீவ், விமானப்படையின் போக்குவரத்து அணியை பராமரிப்பதில் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.