ஆங்கில புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்கள் திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டனம்..!

சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் மட்டுமே இரவு நேரம் கோவில்கள் திறந்திருப்பது வழக்கம் என்று தெரிவித்தார்.



கோவை: ஆங்கில புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்கள் திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள கோவில்களில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்; அதற்கு தடையில்லை என்று, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

ஹிந்து கோவில்களுக்கு தனித்தனியாக சம்பிரதாயங்களும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. காலை முதல் மாலை வரை ஒவ்வொரு காலத்துக்கும் கால பூஜை இருக்கும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் மட்டுமே இரவு நேரம் கோவில்கள் திறந்திருப்பது வழக்கம்.

ஆனால், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு, 12 மணிக்கு கோவிலை திறப்பது என்பது கண்டனத்துக்குரியது.

தமிழர் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே

அரசுக்கு ஹிந்து முன்னணி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு, காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...