கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு 2ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை கிணத்துக்கடவு அரசம்பாளையம் நுகர்பொருள் வாணிபக் கழகம் கிடங்கிலிருந்து ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் திருநாளை ஒட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட நியாயவிலை கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியிலுள்ள நுகர்பொருள் வாணிபகழகம் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அந்தந்த நியாயவிலை கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளை கிடங்கு பொறுப்பாளர் கருணாநிதி, கண்காணிப்பாளர் சேகர், கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் முத்து, நகர்வு பொறுப்பாளர் கதிரேசன், செல்வராஜ் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு 2ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதன் பிறகு தமிழக அரசு அறிவிக்கும் நாட்களில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் திருநாளை ஒட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட நியாயவிலை கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியிலுள்ள நுகர்பொருள் வாணிபகழகம் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அந்தந்த நியாயவிலை கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளை கிடங்கு பொறுப்பாளர் கருணாநிதி, கண்காணிப்பாளர் சேகர், கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் முத்து, நகர்வு பொறுப்பாளர் கதிரேசன், செல்வராஜ் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு 2ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதன் பிறகு தமிழக அரசு அறிவிக்கும் நாட்களில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.