இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோவை: கோவை ஆழியாறு - வால்பாறை சாலை கவியருவி அருகே லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூரைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (33). இவர் ஈச்சர் லாரி ஓட்டுனர். இவர் நேற்று கோயமுத்தூரில் இருந்து பொங்கல் பொருட்களை ஏற்றிக்கொண்டு வால்பாறையில் பொருள்களை இறக்கி விட்டு திரும்பி வரும் வழியில் லாரியில் பிரேக் ட்ரம் சூடாகி பிரேக் பிடிக்காமல் கவிஅருவி அருகே சொட்டு நீர் வளைவு என்னுமிடத்தில் மாலை 5.30 மணிக்கு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி வலது புறமாக கவிழ்ந்தது.

இதில் லாரி ஓட்டுனர் ரமேஷுக்கு சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
கடலூரைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (33). இவர் ஈச்சர் லாரி ஓட்டுனர். இவர் நேற்று கோயமுத்தூரில் இருந்து பொங்கல் பொருட்களை ஏற்றிக்கொண்டு வால்பாறையில் பொருள்களை இறக்கி விட்டு திரும்பி வரும் வழியில் லாரியில் பிரேக் ட்ரம் சூடாகி பிரேக் பிடிக்காமல் கவிஅருவி அருகே சொட்டு நீர் வளைவு என்னுமிடத்தில் மாலை 5.30 மணிக்கு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி வலது புறமாக கவிழ்ந்தது.
இதில் லாரி ஓட்டுனர் ரமேஷுக்கு சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.