கோவில் நிலத்தில் குப்பை கொட்டுவதைத் தடுத்து நிறுத்த கோரி ஊர் பொதுமக்கள் சார்பில், திருப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே, இடுவாய் கிராம பஞ்சாயத்துச் சார்பில், பொது இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு நோய் பரவலை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர் அருகேயுள்ள, இடுவாய் கிராம பஞ்சாயத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், பஞ்சாயத்துப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் அப்பகுதியிலுள்ள கோவில் நிலத்தில் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் குப்பைகள் அதிகளவில் சேர்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், காற்று மாசு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் கோவில் நிலத்தில் குப்பை கொட்டுவதைத் தடுத்து நிறுத்த கோரி ஊர் பொதுமக்கள் சார்பில், திருப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் அருகேயுள்ள, இடுவாய் கிராம பஞ்சாயத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், பஞ்சாயத்துப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் அப்பகுதியிலுள்ள கோவில் நிலத்தில் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் குப்பைகள் அதிகளவில் சேர்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், காற்று மாசு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் கோவில் நிலத்தில் குப்பை கொட்டுவதைத் தடுத்து நிறுத்த கோரி ஊர் பொதுமக்கள் சார்பில், திருப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.