எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் விளை நிலங்களுக்குள் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்திற்கான கலந்தாய்வு விசாரணைக்கு அதிகாரிகள் வர தாமதமானதால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் கொச்சின் பகுதியிலிருந்து வாளையாறு, கிணத்துக்கடவு, காட்டம்பட்டி வரை பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக எரிவாயு குழாய்கள் பதிப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான கலந்தாய்வு விசாரணை கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிலம் எடுப்பு துணை வட்டாட்சியர் செர்லி ஏஞ்சலா தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், காலை 11 மணிக்கு நடப்பதாக இருந்த விசாரணை மாலை 3 மணிக்கு நடத்தப்படும் என்று அலுவலகம் முன்பு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததை விசாரணைக்கு வந்த விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, அதிகாரிகள் வரும் வரை அலுவலகம் வாயலில் அமர்ந்திருந்த விவசாயிகள் மாலை 3 மணிக்கு மேல் ஆகியும் அதிகாரிகள் வராததால் திடீரென கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள கோவை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வந்த கலந்தாய்வு விசாரணை அதிகாரி துணை ஆட்சியர் ஷெர்லி ஏஞ்சலா மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விசாரணை நேரத்தை மாற்றியதை கண்டித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, விவசாயிகளை சமாதானப்படுத்திய போலீசார் மற்றும் அதிகாரிகள் கலந்தாய்வு விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், விவசாயிகள் கேட்ட 51 வினாக்களுக்கு பதில் அளித்தால் மட்டுமே விசாரணைக்கு உள்ளே வருவோம் என்று அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்து அலுவலகத்தின் வாயிலிலேயே அமர்ந்து காத்திருக்கின்றனர்.
எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும், விளை நிலங்கள் வழியாக கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சின் பகுதியிலிருந்து வாளையாறு, கிணத்துக்கடவு, காட்டம்பட்டி வரை பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக எரிவாயு குழாய்கள் பதிப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான கலந்தாய்வு விசாரணை கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிலம் எடுப்பு துணை வட்டாட்சியர் செர்லி ஏஞ்சலா தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், காலை 11 மணிக்கு நடப்பதாக இருந்த விசாரணை மாலை 3 மணிக்கு நடத்தப்படும் என்று அலுவலகம் முன்பு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததை விசாரணைக்கு வந்த விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, அதிகாரிகள் வரும் வரை அலுவலகம் வாயலில் அமர்ந்திருந்த விவசாயிகள் மாலை 3 மணிக்கு மேல் ஆகியும் அதிகாரிகள் வராததால் திடீரென கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள கோவை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வந்த கலந்தாய்வு விசாரணை அதிகாரி துணை ஆட்சியர் ஷெர்லி ஏஞ்சலா மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விசாரணை நேரத்தை மாற்றியதை கண்டித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, விவசாயிகளை சமாதானப்படுத்திய போலீசார் மற்றும் அதிகாரிகள் கலந்தாய்வு விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், விவசாயிகள் கேட்ட 51 வினாக்களுக்கு பதில் அளித்தால் மட்டுமே விசாரணைக்கு உள்ளே வருவோம் என்று அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்து அலுவலகத்தின் வாயிலிலேயே அமர்ந்து காத்திருக்கின்றனர்.
எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும், விளை நிலங்கள் வழியாக கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.