கோவை வாலிபரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் சரணடைந்த 4-பேரிடம் விசாரணை

கோவையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் சரணடைந்த 4-பேரிடம் சரவணம்பட்டி போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் சரணடைந்த 4-பேரிடம் சரவணம்பட்டி போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் ஸ்ரீராம் என்கின்ற குரங்கு ஸ்ரீராம் (22). கடந்த 20 ஆம் தேதி ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பன் கவாஸ்கான் (23) இருவரும் பைக்கில் ரத்தினபுரியில் இருந்து அஞ்சுகம் நகர் வழியாக துடியலூர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது 2 பைக்கில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீராம் மற்றும் கவாஸ்கானை வழிமறித்து மறைத்து வந்திருந்த வீச்சரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஸ்ரீராமை சரமாரியாக வெட்டியது. இதில் ஸ்ரீராம் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதில் கொலைவெறி கும்பலிடம் மாட்டாமல் கவாஸ்கான் தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து கொலைவெறிக் கும்பல் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, சரவணம்பட்டி காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஸ்ரீராமை வெட்டி கொன்றது முன்விரோதம் காரணமாக கோகுல் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.

இதற்காக இரண்டு தனி படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீராம் என்ற குரங்கு ஸ்ரீராமை வெட்டிக் கொன்ற வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுஜின்குமார், கோகுல், ரவீந்திரன், மணிகண்டன் ஆகிய நான்கு பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இவர்கள் நான்கு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சரவணம்பட்டி போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் கோவை அழைத்து வரப்பட்டனர்.

கோவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் நேற்று மாலை முதல் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோவை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, அவர்களை சரவணம்பட்டி போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், கண்ணப்ப நகர் ரத்தினபுரி சிவானந்தா காலனி பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடையே பெண்களைக் காதலிப்பது மற்றும் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கூட்டமாகச் செல்லும் பொழுது ஏற்படும் வாய்த்தகராறு உள்ளிட்டவை முன் விரோதமாக ஏற்கனவே இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்ட மோதலில் ஏற்கனவே கோகுல் தரப்பினருக்கும் கொலை செய்யப்பட்ட குரங்கு ஸ்ரீராம் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக கோகுல் அவரது நண்பர்களுடன் சென்று குரங்கு ஸ்ரீராமை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...