கோவையில் முனிசிபல்‌ பிரிமியர்‌ லீக்‌ போட்டிகளில்‌ உயர்ந்தபட்ச வரிவசூல் இலக்கை அடைந்த வரிவசூலர்களுக்கான விருது - மாநகராட்சி ஆணையர் வழங்கினார்!

கோவை மாநகராட்சி ஜனக்கிரஹா அமைப்புடன்‌ இணைந்து மாநகராட்சி வரிவசூலர்கள்‌ மற்றும்‌ உதவி வருவாய்‌ அலுவலர்களுக்கிடையே வரிவசூல்‌ பணிகளை மேம்படுத்தும்‌ பொருட்டு, முனிசிபல்‌ பிரிமீயர்‌ லீக்‌ போட்டிகள்‌ கடந்த நவம்பர் 1-ம்‌ தேதி முதல்‌ ஆரம்பிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி “ஜனக்கிரஹா” அமைப்புடன்‌ இணைந்து முதன்‌ முறையாக வரி தண்டலர்கள்‌ மற்றும்‌ உதவி வருவாய்‌ அலுவலர்களுக்கிடையே வரிவசூல்‌ பணிகளை மேம்படுத்தும்‌ பொருட்டு நடத்தப்பட்ட முனிசிபல்‌ பிரிமியர்‌ லீக்‌ போட்டிகளில்‌ உயர்ந்தபட்ச வரிவசூல் இலக்கை அடைந்த வரிவசூலர்களுக்கான விருதுகளை மாநகராட்சி ஆணையர் இன்று (30.12.2021) வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

கோவை மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ சொத்துவரி, தொழில்வரி, வரியில்லா இனங்கள்‌ மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌

போன்றவைகளின்‌ கேட்பு தொகைகளை வசூல்‌ செய்ய இலக்கு நிர்ணயம்‌ செய்யப்பட்டு ஒவ்வொரு நிதியாண்டிலும்‌ அதற்கான பணிகள்‌ நடைபெறும்‌. கோவை மாநகராட்சி ஜனக்கிரஹா அமைப்புடன்‌ இணைந்து மாநகராட்சி வரிவசூலர்கள்‌ மற்றும்‌ உதவி வருவாய்‌ அலுவலர்களுக்கிடையே வரிவசூல்‌ பணிகளை மேம்படுத்தும்‌ பொருட்டு, முனிசிபல்‌ பிரிமீயர்‌ லீக்‌ போட்டிகள்‌ 2021 நவம்பர் 1-ம்‌ தேதி முதல்‌ ஆரம்பிக்கப்பட்டது.

இதில்‌ நடப்பு 2021-22-ம்‌ நிதியாண்டு தொடங்கி நவம்பர்‌ மாதம்‌ வரை வரியில்லா இனங்கள்‌ மற்றும்‌ குடிநீர் கட்டண வசூல்‌ பணிகளில்‌ உயர்ந்தபட்ச வசூல்‌ இலக்கை அடைந்த வரிவசூலர்கள்‌ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்‌. 2021-22-ம்‌ நிதியாண்டில்‌ வரியில்லா இனங்களின்‌ நடப்பு வசூலில்‌ உயர்ந்தபட்ச வசூல்‌ இலக்கை அடைந்த சிவக்குமார்‌-தெற்கு மண்டலம்‌, துரைராஜ்‌- கிழக்கு மண்டலம்‌ வெங்கடாச்சலம்‌- தெற்கு மண்டலம்‌ ஆகியோருக்கும்‌, 2021-22-ம்‌ நிதியாண்டில்‌ வரியில்லா இனங்களின்‌ நிலுவை வசூலில்‌ உயாந்தபட்ச வசூல்‌ இலக்கை அடைந்த ஜெயக்குமார்‌-வடக்கு மண்டலம்‌, சிவக்குமார்‌- தெற்கு மண்டலம்‌, துரைராஜ்‌- கிழக்கு மண்டலம்‌ ஆகியோருக்கும்‌, 2021-22-ம்‌ நிதியாண்டில்‌ குடிநீர் கட்டண நடப்பு வசூலில்‌ உயாந்தபட்ச வசூல்‌ இலக்கை அடைந்த ஜெயக்குமார்‌-வடக்கு மண்டலம்‌, யமுனாதேவி- வடக்கு மண்டலம்‌ மற்றும்‌ சுமதி- வடக்கு மண்டலம்‌ ஆகியோருக்கும்‌, 2021-22-ம்‌ நிதியாண்டில்‌ குடிநீர் கட்டண நிலுவை வசூலில்‌ உயர்ந்தபட்ச வசூல்‌ இலக்கை அடைந்த மலா்க்கொடி- தெற்கு மண்டலம்‌, ரமேஷ்குமார்‌- தெற்கு மண்டலம்‌ மற்றும்‌ மகேஸ்வரன்‌ தெற்கு மண்டலம்‌ ஆகியோருக்கும்‌ சாதனையாளர்‌ விருதுகள்‌ வழங்கப்பட்டுள்ளது.

மேலும்‌, வரியில்லா இனங்களில்‌ நடப்பு வசூலில்‌ முதல்‌ இடத்தினை பிடித்த சிவக்குமார்‌- தெற்கு மண்டலம்‌, நிலுவை வசூலில்‌ முதல்‌ இடத்தினை பிடித்த ஜெயக்குமார்‌- வடக்கு மண்டலம்‌ ஆகியோருக்கும்‌, குடிநீர்‌ கட்டண நடப்பு வசூலில்‌ முதல்‌ இடத்தினை பிடித்த ஜெயக்குமார்‌- வடக்கு மண்டலம்‌ மற்றும்‌ நிலுவை வசூலில்‌ முதல்‌ இடத்தினை பிடித்த மலா்க்கொடி- தெற்கு மண்டலம்‌ ஆகியோருக்கு சாதனையாளர்‌ விருதுடன்‌ பரிசு கூப்பன்கள்‌ வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷா்மிளா அவர்கள்‌, மண்டல உதவி ஆணையாளர்கள்‌ என்‌.அண்ணாதுரை (தெற்கு), செந்தில்குமார்‌ இரத்தினம்‌ (கிழக்கு) உதவி வருவாய்‌ அலுவலா்கள்‌, வரி தண்டலா்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...