ஈஷா சார்பில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ 150 இடங்களில்‌ இலவச யோகா வகுப்புகள்‌..!

இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும்‌ இப்பயிற்சியில்‌ 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்‌ கலந்து கொள்ளலாம்‌. யோகா செய்த முன்‌ அனுபவம்‌ எதுவும்‌ தேவை இல்லை.



கோவை: ஆரோக்கியமான, ஆனந்தமான தமிழகத்தை உருவாக்கும்‌ நோக்கத்தில்‌ ஈஷா அறக்கட்டளை சார்பில்‌ வரும் ஜனவரி 2, 3ம் தேதிகளில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ அனைவருக்கும்‌ இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

அதன்படி, வரும்‌ ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில்‌ தமிழ்நாட்டில் சுமார்‌ 150-க்கும்‌ மேற்பட்ட இடங்களில்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெற உள்ளது. ஈஷா யோகா மையத்தால்‌ பயிற்சி அளிக்கப்பட்ட ஈஷா தன்னார்வலர்கள்‌ இவ்வகுப்பை நேரில்‌ நடத்த உள்ளனர்‌.

இவ்வகுப்பில்‌ சூர்ய சக்தி என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும்‌. இப்பயிற்சியை தினமும்‌ தொடர்ந்து செய்து வருவதன்‌ மூலம்‌ இதயத்தை பலப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக்கலாம்‌, உடலில்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்‌.

இந்த சூர்ய சக்தி பயிற்சி குறித்து சத்குரு கூறும்‌ போது, உங்களுக்குள்‌ உள்ள சூரியனை நீங்கள்‌ தூண்டினால்‌, உங்கள்‌ உடல்‌ ஒளி வீசு பிரகாசிக்க துவங்கும்‌ என கூறியுள்ளார்‌.

இவ்வகுப்புகள்‌ ஜனவரி 2 மற்றும்‌ 3 தேதிகளில்‌ காலை 6.30 மணி - காலை 8.15 மணி, நண்பகல்‌ 11.30 மணி - 1.15 மணி, மாலை 5.30 மணி - 7.15 மணி என 3 நேரங்களில்‌ நடக்கும்‌. இதில்‌ ஏதேனும்‌ ஒரு நாள்‌ ஒரு நேரத்தை பங்கேற்பாளர்கள்‌ தேர்வு செய்து கொள்ளலாம்‌.

இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும்‌ இப்பயிற்சியில்‌ 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்‌ கலந்து கொள்ளலாம்‌. யோகா செய்த முன்‌ அனுபவம்‌ எதுவும்‌ தேவை இல்லை. உங்கள்‌ இருப்பிடத்திற்கு அருகில்‌ நடக்கும்‌ இவ்வகுப்பில்‌ பங்கேற்க Isha.co/SSRD என்ற இணையதளத்தில்‌ முன்பதிவு செய்வது அவசியம்‌. முன்பதிவுக்கு உதவி தேவைப்பட்டால்‌ 83000 99555 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்‌.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...