உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: கோவை காரமடை அருகே கருணாநிதியால் வழங்கப்பட்ட இடத்திற்கு "உதயா நகர்" என பெயர் சூட்டிய திமுகவினர்..!

1996ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை காரமடை அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதியால் வழங்கப்பட்ட இடத்திற்கு "உதயா நகர்" என திமுகவினர் பெயர் சூட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கேரள எல்லைப்பகுதி சீங்குழி. இப்பகுதியில் மலைவாழ் மக்களான இருளர்கள் மற்றும் அருந்ததிய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், 1996ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் இப்பகுதியில் வசிக்கும் அருந்ததிய மக்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 27ம் தேதி எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் தலைமையில் திரண்ட திமுகவினர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் கொடுக்கப்பட்ட இந்த இடத்திற்கு "உதயா நகர்" என பெயரிட்டனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் உதயா நகர் என பெயர் பலகையும் திறக்கப்பட்டு இனிப்புகளை வழங்கி திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் ஒருவரின் குழந்தைக்கு "இன்பநிதி" எனவும் பெயர் சூட்டப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் தோலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா செந்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் செந்தில், காரமடை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தாயனூர் பிரதீப் மாணவ, மாணவியருக்கு புத்தகங்களை வழங்கியும் விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...