குப்பனூரில் உள்ள செங்கல் சூளையில், மெஷினில் சிக்கி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அஜாக்கிரதையாக இருந்த சூப்பர் வைசர் மற்றும் ஆப்ரேட்டர் மீது, பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை: குப்பனூரில் உள்ள செங்கல் சூளையில், மெஷினில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அஜாக்கிரதையாக இருந்த சூப்பர் வைசர் மற்றும் ஆப்ரேட்டர் மீது, பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமிரூல் உசேன்(19). இவர் பேரூர் அடுத்த கரடிமடை செல்லும் வழியில் உள்ள குப்பனூரில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார். நேற்றுமுன் தினம் மாலை, சூளையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மின்தடை ஏற்பட்டது.
அப்போது, சூளையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வரும் கோகுல் கிருஷ்ணாவும், ஆபரேட் அமிருல்லை கலவை கலக்கும் மெஷின் உள்ளே இறங்கி, உள்ளே உள்ள கலவையைச் சுத்தம் செய்யும்படி கூறியுள்ளனர்.
மின்தடை ஏற்பட்டதால், மிஷினின் சுவிட்சை ஆப் செய்யாமல், சூப்பர்வைசரும், ஆபரேட்டரும் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். அமிரூல் உசேன் மெஷினுக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மின்சாரம் வந்ததால், மெஷின் இயங்கத் துவங்கியது.
இதில், அமிரூல் உசேன் மெஷினில் சிக்கினார். உடனடியாக, சூபர்வைசர் மெஷினின் சுவிட்சை ஆப் செய்து, மெஷினுக்குள் இருந்து அமிரூல் உசேனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார். அஜாக்கிரதையாக இருந்த சூப்பர் வைசர் கோகுல் கிருஷ்ணா மற்றும் ஆப்ரேட்டர் மாரிமுத்து மீது, பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமிரூல் உசேன்(19). இவர் பேரூர் அடுத்த கரடிமடை செல்லும் வழியில் உள்ள குப்பனூரில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார். நேற்றுமுன் தினம் மாலை, சூளையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மின்தடை ஏற்பட்டது.
அப்போது, சூளையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வரும் கோகுல் கிருஷ்ணாவும், ஆபரேட் அமிருல்லை கலவை கலக்கும் மெஷின் உள்ளே இறங்கி, உள்ளே உள்ள கலவையைச் சுத்தம் செய்யும்படி கூறியுள்ளனர்.
மின்தடை ஏற்பட்டதால், மிஷினின் சுவிட்சை ஆப் செய்யாமல், சூப்பர்வைசரும், ஆபரேட்டரும் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். அமிரூல் உசேன் மெஷினுக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மின்சாரம் வந்ததால், மெஷின் இயங்கத் துவங்கியது.
இதில், அமிரூல் உசேன் மெஷினில் சிக்கினார். உடனடியாக, சூபர்வைசர் மெஷினின் சுவிட்சை ஆப் செய்து, மெஷினுக்குள் இருந்து அமிரூல் உசேனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார். அஜாக்கிரதையாக இருந்த சூப்பர் வைசர் கோகுல் கிருஷ்ணா மற்றும் ஆப்ரேட்டர் மாரிமுத்து மீது, பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.