திருப்பூரில் பல்வேறு பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பு

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் மற்றும் பல்லடம் உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 4-கோடியே 18-லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் மற்றும் பல்லடம் உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 4 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மண் சாலைகளை தார் சாலைகளாக அமைக்கும் பணி, பூங்கா அமைத்தல், நீர்த்தேக்கத் தொட்டி, அரசு மருத்துவமனை கட்டிடம், வார சந்தைக்கான புதிய கட்டிடம் என பல்வேறு பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரத்திற்கு உட்பட்ட எட்டாவது வார்டு பணப்பாளையத்தில் 75 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பணிக்கும், 12 வது வார்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சின்னையா கார்டன் பகுதியில் 90 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிக்கும், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உள்நோயாளிகள் உடன் வரும் உதவியாளர்களுக்குத் தங்குமிடம் கட்டுவதற்காகத், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட உள்ள பணிக்கும், 15வது வார்டில் அண்ணா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முதல் அரசு மருத்துவமனை வரை 40 லட்சம் மதிப்பீட்டில் 300 மில்லி மீட்டர் விட்டமுள்ள துருபிடிக்காத வார்ப்பு இரும்பு குழாய் அமைத்தல் மற்றும் 14வது வார்டு எம்ஜிஆர் சாலை அண்ணா சிலை முதல் மங்கலம் சாலை தண்டபாணி கோயில் வரை 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 300 மில்லி மீட்டர் விட்டமுள்ள துருப்பிடிக்காத இரும்பு குழாய் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை செய்யப்பட்டு பணிகளைத் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு பே சாமிநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



அதேபோல இரண்டாவது வார்டில் புதிதாக வடிகால் அமைத்தல் சேடபாளையம் பகுதியில் மண் சாலைகளை தார் சாலைகளாக அமைக்கும் பணி, அரிஜன காலனி பகுதியில் புதியதாக வடிகால் அமைத்தல் என பல்லடம் நகரத்திற்கு உட்பட்ட வார்டுகளில் ரூபாய் 3 கோடியே 66 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு மக்கள் நலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

முன்னதாக பொங்கலூரில் 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வாரச்சந்தையினை, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.



மாதப்பூர் ஊராட்சியில் பொங்கலூர் ஊராட்சி பொது நிதியிலிருந்து மாதப்பூர் பட்டத்தரசி அம்மன் கோயிலிலிருந்து திருச்சி ரோடு வரை ரூபாய் 10 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல பத்மநாபன் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார் பல்லடம் ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திர குமார் பல்லடம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நா சோமசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...