உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, காசநோய் போன்ற தொடர் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது - மாவட்ட தொற்றா நோய்த் தடுப்பு மருத்துவ அலுவலர் விஜயகுமார்.
கோவை: தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை, ரத்த அழுத்தம், இயன்முறை சிகிச்சை உள்பட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட தொற்றா நோய்த் தடுப்பு மருத்துவ அலுவலர் விஜயகுமார் கூறியதாவது:-
"கோவை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காசநோய் உள்பட 10க்கும் மேற்பட்ட முக்கிய பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, காசநோய் போன்ற தொடர் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது. அதன்படி, இதுவரை ரத்த அழுத்த நோயாளிகள் 74,109 பேருக்கும், சர்க்கரை நோயாளிகள் 36, 776 பேருக்கும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை இரண்டும் உள்ளவர்கள் 34,177 பேருக்கும், இயன்முறை சிகிச்சை 6,449 பேருக்கும், பிற நோய் பாதிப்பிற்கு 6,692 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சென்று சிகிச்சை, 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் அளிப்பதால், பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது", இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாவட்ட தொற்றா நோய்த் தடுப்பு மருத்துவ அலுவலர் விஜயகுமார் கூறியதாவது:-
"கோவை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காசநோய் உள்பட 10க்கும் மேற்பட்ட முக்கிய பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, காசநோய் போன்ற தொடர் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது. அதன்படி, இதுவரை ரத்த அழுத்த நோயாளிகள் 74,109 பேருக்கும், சர்க்கரை நோயாளிகள் 36, 776 பேருக்கும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை இரண்டும் உள்ளவர்கள் 34,177 பேருக்கும், இயன்முறை சிகிச்சை 6,449 பேருக்கும், பிற நோய் பாதிப்பிற்கு 6,692 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சென்று சிகிச்சை, 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் அளிப்பதால், பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது", இவ்வாறு அவர் கூறினார்.