கோவையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை..! பொதுமக்கள் வரவேற்பு

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, காசநோய் போன்ற தொடர் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது - மாவட்ட தொற்றா நோய்த் தடுப்பு மருத்துவ அலுவலர் விஜயகுமார்.


கோவை: தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை, ரத்த அழுத்தம், இயன்முறை சிகிச்சை உள்பட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தொற்றா நோய்த் தடுப்பு மருத்துவ அலுவலர் விஜயகுமார் கூறியதாவது:-

"கோவை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காசநோய் உள்பட 10க்கும் மேற்பட்ட முக்கிய பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, காசநோய் போன்ற தொடர் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது. அதன்படி, இதுவரை ரத்த அழுத்த நோயாளிகள் 74,109 பேருக்கும், சர்க்கரை நோயாளிகள் 36, 776 பேருக்கும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை இரண்டும் உள்ளவர்கள் 34,177 பேருக்கும், இயன்முறை சிகிச்சை 6,449 பேருக்கும், பிற நோய் பாதிப்பிற்கு 6,692 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சென்று சிகிச்சை, 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் அளிப்பதால், பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது", இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...