கிணத்துக்கடவு கோதவாடி பகுதியில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி..!

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் அதிமுக, அமமுக கட்சியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் கோதவாடி மயில்சாமி, முன்னாள் கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மயில்சாமி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

அப்போது, திமுகவில் இணைந்த மாற்று கட்சியினருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி கதிர்வேல், தெற்கு ஒன்றிய செயலாளர் துரை, பொள்ளாச்சி நகர துணை செயலாளர் கார்த்திகேயன், கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...