கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனத்தில் 2.5 கிலோ போதை வஸ்துக்களை கடத்தி வந்த இளைஞர் கைது..!

கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் போதை வஸ்துக்களை கடத்தி வந்து பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு கொடுப்பது விசாரணையில் தெரியவந்தது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தில் 2.5 கிலோ போதை வஸ்துக்களை கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, தலைமை காவலர் ரத்தினசாமி ஆகியோர் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடமிருந்த 2.5 கிலோ போதை வஸ்துக்களை பறிமுதல் செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கல்லாங்காட்டுபுதூர் எஸ்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(30) கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் போதை வஸ்துகளை கடத்தி வந்து பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு கொடுப்பது விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...